திருக்குறள்

1232.

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண்.

திருக்குறள் 1232

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண்.

பொருள்:

பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன.

மு.வரததாசனார் உரை:

பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.

சாலமன் பாப்பையா உரை:

பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!.